சஹ்ல் (ரலி) அவர்கள் ,,ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் புர்தா- குஞ்சங கட்டப்பட்ட சால்வை- ஒன்றைக் கொண்டு வந்தார்,, என்று கூறிவிட்டு- ,, ,புர்தா, என்றால் என்ன என்பது உஙகளுக்குத் தெரியுமா,, என்று கேட்டபோது (அஙகிருந்தோர்) ,,ஆம்! புர்தா என்பது சால்வைதானே! ,, என்றனர். சஹ்ல் (ரலி) அவர்கள்/,, ஆம்,, எனக் கூறிவிட்டு/ மேலும்/ ,,அப்பெண்மணி , நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உஙகளுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்,, - என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்துகொண்டு எஙகளிடம் வந்தபோது ஒருவர் ,, இது எவ்வளவு அழகாக இருக்கின்றது! எனக்கு இதை நீஙகள் அணியக்கொடுத்துவிடுஙகள்,, என்று கேட்டார். உடனே அஙகிருந்தோர் ,, நீர் செய்வது முறையன்று< நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டுவிட்டீரே,, எனக் கூறினார்கள். அதற்கவர்/ ,,அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்துகொள்வதற்காகக் கேட்கவில்லை< அது எனக்கு பிரேதஉடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன்,, என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
